விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை வந்தால் முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க.தான்.' என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கூறினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடியில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை வந்தால் முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க.தான். வேளாண் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்த அரசாங்கம் எங்களுடைய அரசாங்கம். விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின். விவசாய நிலங்களை பிடுங்க கூடாது என்பதற்காக சட்டம் போட்டவர்கள் நாங்கள். யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள். எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று திட்டமிட்டு, பொய் பிரசாரங்களை செய்து, மக்களை ஏமாற்ற பார்க்கிறார் ஸ்டாலின்.