திமுகவின் வேட்பாளர் அறிவிப்பு முதல் கதாநாயகன். இரண்டாவது கதாநாயகன் தேர்தல் அறிக்கை. தேர்தல் குழுவினர் தமிழகம் முழுவதும் சென்று மக்களின் கருத்துக்களை அறிந்து அறிக்கையை தயார் செய்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் உள்ளது.
திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
பொங்கல் திருநாள் மாநில பண்பாட்டு தினமாக கொண்டாடப்படும்.
ஆவின்பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.
சொத்துவரி அதிகரிக்கப்படாது.
பெட்ரோல் ரூ.5-ம், டீசல் ரூ.4-ம் விலை குறைக்கப்படும்.
கொரோனா நிவாரணமாக ரேசன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
சைபர் காவல்நிலையங்கள் அமைக்கப்படும்.
நடைபாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறப்படும்.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.